சேறும், சகதியுமான சாலை

Update: 2023-02-05 11:34 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ சிந்தாமணி மற்றும் மேல சிந்தாமணியை இணைக்கும் மண்வழி சாலை தற்போது பெய்த மழையின் காரணமாக சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், முதியவர்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்