சேதமடைந்த சாலை

Update: 2023-02-05 08:30 GMT

பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலில் இருந்து மேலாங்கோடு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த சாலையில் தெரு விளக்குகளும் எரிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சிரமைத்து தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்