மயானத்திற்கு செல்ல சாலை அமைக்கப்படுமா?

Update: 2023-02-01 13:03 GMT
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தொப்பம்பட்டியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு யாரேனும் இறந்தால் அடக்கம் செய்வதற்கு சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மயானம் உள்ளது. ஆனால் இந்த மயானம் செல்லதற்கான கண்மாயில் தண்ணீர் இடுப்பளவு இருக்கிறது. இதனால் உடலை தூக்கி செல்வதில் மிகவும் சிரமமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயானத்திற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்