புதர் மண்டிய சாலை

Update: 2023-01-29 12:11 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை சுடுகாடு பாதை மற்றும் பெரியாண்டவர் கோவில் வழியாக மணியார் ஏரிக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் மயானத்துக்கு செல்பவர்கள், பெரியாண்டவர் கோவிலுக்கு செல்பவர்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய விவசாயிகள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேதநதி ஆற்று வழியாக மணியார் ஏரிக்குச் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்