தென்திருப்பேரையில் இருந்து மாவடிபண்ணை வழியாக குரங்கணி செல்லும் சாலை சேதமடைந்து பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இந்த வழியாகத்தான் ஏரல், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமானவர்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.