புவனகிரி தாலுகா சித்தேரி பகுதியில் சாலை வசதி இல்லை. இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறி விடுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் புதிதாக சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.