குண்டும், குழியுமான சாலை

Update: 2023-01-22 11:17 GMT
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் இருந்து புகழூர் காகித ஆலை வழியாக புன்னம் சத்திரம் செல்வதற்காக தார் சாலை போடப்பட்டுள்ளது. இதில் காகித ஆலை பேரூராட்சி அலுவலகம் முதல் புது குறுக்கு பாளையம் வரை நெடுகிலும் குண்டும், குழியுமாக உள்ளது. அதேபோல் தேவையற்ற முறையில் காகித ஆலை நெடுகிலும் தார் சாலையின் குறுக்கே ஆங்காங்கே ஏராளாமான வேகத்தடை போடப்பட்டு வெள்ளை நிறம் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் அந்த இடங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்