குண்டும், குழியுமான சாலை

Update: 2023-01-22 11:14 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா சிறுகன்பூர் கிராமத்தில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் சில நேரங்களில் தவறி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.


மேலும் செய்திகள்