புதர் செடிகள் அகற்றப்படுமா?

Update: 2023-01-22 09:13 GMT

கோவை வெள்ளலூர் அருகே கோணவாய்க்கால்பாளையத்தில் அரசு பள்ளி அருகே பாதாள சாக்கடை கட்ட குழி தோண்டப்பட்டது. பின்னர் அந்த குழி மூடப்பட்டது. தற்போது அந்த பகுதியில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது. அதில் விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் அந்த வழியாக சென்று வரும் மாணவ-மாணவிகள் அச்சப்படுகிறார்கள். எனவே அசம்பாவிதங்கள் நடைபெறும் முன், அந்த புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்