மண்சாலை தார் சாலையாக மாற்றப்படுமா?

Update: 2023-01-18 16:03 GMT
கரூர் மாவட்டம். ஒரம்புப்பாளையத்தில் இருந்து கவுண்டன்புதூர் செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட தூரம் வரை தார் சாலை போடப்பட்டுள்ளது. அதன் பிறகு ரெயில்வே சாலையை ஒட்டி செல்லும் சாலை பல ஆண்டுகளாக மண்சாலையாகவே உள்ளது. தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக மண் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி செல்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்