சாலையோர தடுப்புகள் அமைக்கப்படுமா?

Update: 2022-07-19 11:27 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி வைகை ஆற்றின் கரையோரப்பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டில் சாலையோர தடுப்புகள் இல்லை. இதனால் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் சாலை சேதமடைந்து பெரிய பள்ளங்களோடு குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் சாலையோர தடுப்புகள் அமைத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

பொதுமக்கள், பரமக்குடி.

மேலும் செய்திகள்