வர்ணம் பூசப்படாத வேகத்தடை

Update: 2023-01-11 12:41 GMT

பெரம்பலூர்- துறையூர் சாலையில் கல்யாண் நகர் பகுதியில் வேகமாகச் செல்லும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில், சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையின் மீது பூசப்பட்டு இருந்த வர்ணங்கள் தற்போது அழிந்தநிலையில் மீண்டும் வர்ணங்கள் பூசப்படாமல் காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சாலையின் நடுவே வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை வேகமாக விட்டு நிலை தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதே நிலை நீடித்தால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்