சேதமடைந்த சாலையால் அவதி

Update: 2023-01-08 17:39 GMT
மூங்கில் துறைப்பட்டு அருகே மேல்சிறுவல்லூர்-மங்கலம் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து காணப்படுவதால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள் ஆமை வேகத்தில் செல்லும் நிலை உள்ளது. இதனால் பணியாளர்கள், பள்ளி-கல்லூரி மாணவா்கள் காலதாமதமாக சென்று வருவதால், மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்துகளும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்