தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2023-01-08 11:38 GMT
கரூர் மாவட்டம், புகழூர் காகித ஆலையிலிருந்து புன்னம் சத்திரம் செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகில் ரெயில்வே கேட் மூடி இருக்கும்போது இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மண் சாலையை சரிசெய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த உள்ளாட்சித் துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்