சாலையோரம் குவிந்த குப்பைகள்

Update: 2022-12-21 12:57 GMT

சாயர்புரம் அருகே சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்து தங்கம்மாள்புரம் ஊருக்கு மேற்கு பகுதியில் சாலையோரம் குப்பைகளை கொட்டுகின்றனர். அந்த குப்பைகள் காற்றில் பறந்து சாலை முழுவதும் குப்பைக்கூளமாக காட்சியளிக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்றி தூய்மையாக பராமரிக்கவும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக மாற்று இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்