வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-12-21 11:02 GMT

பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் எசனை காட்டு மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து ரெட்டைமலை சந்து, மேலப்புலியூர், லாடபுரம் வழியாக பெரம்பலூர்-துறையூர் சாலையை இணைக்கும் தார் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை அகலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்