செம்பியநல்லூர் ஊராட்சி அரசுப்பணியாளர் நகரில் 41 குடியிருப்புகள் உள்ளது. இங்குள்ள சாலை பராமரிப்பின்றி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லமுடியாமல் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே பழுதடைந்த அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
-----------------