திருச்சி மாநகராட்சி பெரிய மிளகுபாறை, கள்ள தெரு மெயின் ரோடு பகுதியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பகுதி வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்கின்றனர். இதனால் மாணவ-மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைத்து மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.