சேதமடைந்த பாலம்

Update: 2022-11-30 15:00 GMT
கடலூர் ஆல்பேட்டையில் உள்ள தென்பெண்ணையாற்று பாலம் சேதமடைந்து ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளங்கள் காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி நிலை தடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் அந்த பாலத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்