புதிய பாலம் கட்டித்தரப்படுமா?

Update: 2022-07-17 15:14 GMT
நாகை மாவட்டம் வடக்குபொய்கைநல்லூரையும்-கருவேலங்கடை கிராமத்தையும் இணைக்கும் வகையில் பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் முறையாக பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும், பாலம் மிகவும் தாழ்வாக காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் பாலம் மழைநீரில் மூழ்கிவிடுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் பாலம் இருப்பது தெரியாமல் சென்று விழுந்துவிடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பாலத்தை இடித்து அகற்றிவிட்டு உயரமான புதிய பாலம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்