சாலை வசதி வேண்டும்

Update: 2022-11-30 11:44 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள கண்ணங்குடியில் உள்ள அந்தோனியார் கோவிலில் இருந்து சற்று தூரத்தில் வலது புறமாக 15-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அவர்கள் செல்வதற்கு போதுமான சாலை வசதி இல்லை. இதனால் மழைபெய்யும்போது அவர்கள் சேறும், சகதியுமான சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவிகள், முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்