சரிவர அமைக்கப்படாத பணிகள்

Update: 2022-11-27 12:24 GMT
அரியலூர் மாவட்டம் காவனூர் பஞ்சாயத்து உட்பட்ட கா.அம்பாபூர் கிராமத்தில் காலனி தெருவில் இருந்து மயானம் கொட்டகை வரை கப்பி சாலை அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்நிலையில் காலனித்தெரு பகுதியில் இருந்து மயான கொட்டகை பகுதி வரை இருபுறமும் உள்ள நீர்வரத்து வாய்க்காலை சரியாக அகலபடுத்தவில்லை. மேற்படி சாலையை அரசு அதிகாரிகள் அளந்து கொடுத்த அளவுகளின்படி சாலை அமைக்காமல் உள்ளது. மேலும் நீர்நிலை பகுதிகளை சரியாக தூர்வாரமல் இருப்பதால், சில இடங்களில் மட்டும் பள்ளம் தோண்டியுள்ளதால், தற்போது மழை பெய்து வருவதால் மழைநீர் தேங்கி சாக்கடையாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று வியாதிகள் ஏற்படும் அபாயமான சூழ்நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்