குண்டும், குழியுமான தார்சாலை

Update: 2022-11-27 12:24 GMT
கரூர் மாவட்டம், புங்கோடையில் இருந்து நத்தமேடு செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாகவும், தொடர் மழையின் காரணமாகவும் தார்சாலை நெடுகிலும் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்