விபத்து அபாயம்

Update: 2022-11-27 09:17 GMT

கன்னியாகுமரியில் நாகர்கோவில் வரும் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் கரியமாணிக்கப்புரம் மேம்பாலம் அருகில் பள்ளம் ஏற்பட்டு சேதமடைந்து காணப்படுகிறது. அந்த இடத்தில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இரவுநேரம் அந்த வழியாக வேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சாலையில் சேதமடைந்த இடத்தில் உள்ள பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோமதி ராஜா, சுசீந்திரம்.

மேலும் செய்திகள்