சேறும், சகதியுமான சாலை

Update: 2022-11-23 14:20 GMT
கரூர் மாவட்டம், புன்னம்சத்திரத்தில் இருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள புகழூரில் ரெயில்வே கேட் உள்ளது. ரெயில்வே கேட் பூட்டப்படும் போது இரு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் ரெயில்வே கேட் ஓரத்தில் மண்சாலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக போடப்பட்ட மண் சாலை மிகவும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்