போக்குவரத்து நெரிசல்

Update: 2022-11-20 15:14 GMT

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகிலும், அந்த பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையிலும் லாரிகள் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எதிரே வரக்கூடிய வாகனங்கள் தெரியாமல் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக காலை 4 மணி முதல் 9 மணி வரையில் அதிக அளவில் சாலை ஓரங்களில் லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே சாலையோரங்களில் லாரிகள் நிறுத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்