சாலையை மறைத்து வளர்ந்துள்ள செடி, கொடிகள்

Update: 2022-11-16 17:49 GMT
கடலூர் மாவட்டம் வெள்ளைக்கரை கிராமத்தில் உள்ள சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. சாலையை மறைந்தவாறு செடிகள் வளர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அடிக்கடி அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு வருவதும் தொடர்கதையாகி வருகிறது. எனவே உயிர்சேதம் ஏற்படும் முன் சாலையை மறைத்து வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்