குண்டும், குழியுமான சாலை

Update: 2022-11-16 16:34 GMT
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், த.சோழன்குறிச்சி கிராமம் புதுத்தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மறுசீரமைப்பு பணிகள் கூட நடைபெறவில்லை. தற்போது பெய்துவரும் மழையில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இப்பகுதியில் புதிய சாலை அமைத்து சாலையோரம் வடிகால் வாய்க்கால் அமைத்து தர வேண்டு என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்