குண்டும், குழியுமான சாலை

Update: 2022-11-16 11:46 GMT
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் திருநல்லூரில் இருந்து விரலிமலை செல்லும் முக்கிய சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் திருநல்லூர்- பூமரம் இடையிலான பகுதிகளில் மட்டும் தினமும் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழைநீர் பள்ளங்களில் தேங்கி நிற்பதினால் இரவு நேரத்தில் இந்த சாலையின் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்