குண்டும், குழியுமான சாலை

Update: 2022-11-13 13:37 GMT

கோவை தொப்பம்பட்டி குறிஞ்சி நகரில் உள்ள சாலை பழுதடைந்து உள்ளது. குறிப்பாக குண்டும், குழியுமாக காணப்படுவதால், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதை அறியாமல் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குழிக்குள் சக்கரம் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. அதுவும், இரவு நேரத்தில் கடும் இன்னலை அவர்கள் சந்தித்து வருகிறார்கள். எனவே அந்த சாலையில் உள்ள குழிகளை மூடுவதோடு உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்