சேறும், சகதியுமான சாலை

Update: 2022-11-09 13:08 GMT
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், நமங்குணம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மேற்கு, வடக்கு தெருவில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் தற்போது பெய்த மழையில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இப்பகுதியில் புதிய தார் சாலை அமைத்து சாலையோரம் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்