தார்சாலை வேண்டும்

Update: 2022-11-09 13:00 GMT

திருச்சி கே.கே.நகரில் உள்ள முருகவேல் நகர் 2-வது தெருவில் தற்போதுதான் பாதாள சாக்கடை திட்ட பணி முடிவடைந்தது. இதனால் தெருக்கள் அனைத்தும் மிகவும் சோதம் அடைந்துள்ளன. தற்போது மழை பெய்வதினால் தெருக்களில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, புதிய தார்சாலை அமைத்து சாலையோரம் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்