கீழே விழும் வாகன ஓட்டிகள்

Update: 2022-11-06 13:54 GMT
அரியலுர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஆர்.சி.பாத்திமா தொடக்கப்பள்ளிக்கு செல்லும் சாலையில் இருந்து, பகுத்தறிவு நகர் மெயின் ரோடு வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு கீழே விழுந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்