குண்டும், குழியுமான சாலை

Update: 2022-11-02 12:44 GMT
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா அலுவலகத்தில் இருந்து இலங்கைச்சேரி கிராமத்திற்கு செல்லும் 2 கிலோ மீட்டர் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இலங்கைச்சேரி மற்றும் ஆதிகுடுக்காடு கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்