கடலூா்-பாண்டிச்சேரி செல்லும் சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சாலை பள்ளத்தில் வாகன ஓட்டிகள் அடிக்கடி விழுந்து விபத்தில் சிக்கித் தவிக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாநகர மக்களின் எதிர்பார்ப்பாகும்.