நோய் பரவும் அபாயம்

Update: 2022-10-30 14:02 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம்,திருவாலந்துறை அம்பேத்கர் தெருவில் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே உள்ள சாலையில் மழைக்காலங்களில் நீர் தேங்கி பொதுமக்கள் நடக்க முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் சேறும், சகதியுமாக உள்ள அந்த இடத்தில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சிமெண்டு சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்து மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்