செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் முடிச்சூர் சாலை கிருஷ்ணாநகர் தனியார் வங்கி அருகிலும், நெடுஞ்சாலை சந்திப்பிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு சிக்னல் வசதி இருந்தது. தற்போது அந்த சிக்னலை நிறுத்திவிட்டனர். சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு பள்ளி சிறுவன் மேற்படி நெடுஞ்சாலை சந்திப்பில் விபத்துக்குள்ளானான். எனவே மீண்டும் இந்த பகுதியில் சிக்னல் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.