நடைபாதைகளில் ஆபத்தான குழி
திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியான பிரதான தார்ச்சாலைகள் அனைத்தும் காங்கிரீட் சாலைகளாக மாற்றப்பட்டு வருகிறது. காங்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்ட பின்னர் இதன் இருபுறத்திலும் நடந்து செல்ல நடைபாதை கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் நடைபாதையின் கீழ் சாக்கடை செல்லும் கால்வாய் மூடப்பட்டு அதன்மேல் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் ஆங்காங்கே குழிகள் உள்ளன. இதற்கு மூடிபோடவில்லை. மழைக்காலங்களில் காங்கிரீட் சாலைகளில் ஒரு அடி உயரத்திற்கு மழை நீர் பாய்ந்து செல்லும் போது ஒருசில வாகன ஓட்டிகள் நடைபாதை மேல் வாகன ஓட்டி செல்கிறார்கள். அப்போது நடைபாதையில் உள்ள குழிகள் மேல் மழை நீர் செல்லும்போது குழி தெரிவதில்லை. இதனால் வாகனத்துடன் குழிக்குள் விழுந்து விடுகிறார்கள். எனவே இந்த ஆபத்தான குழிகளுக்கு மூடி போட வேண்டும்.
கோவிந்தன், திருப்பூர்.