வாகனஓட்டிகள் சிரமம்

Update: 2022-10-30 11:43 GMT

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தன் பகுதி சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். இரவு நேரங்களில் சாலையில் அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம்  உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்