விபத்து அபாயம்

Update: 2022-10-30 11:08 GMT
கோவை டாடாபாத் ஐந்து முக்கு சந்திப்பு பகுதியில் சாலையின் நடுவே பாதாள சாக்கடை பராமரிப்பு பணிக்கான ஆள் இறங்கு குழி உள்ளது. இந்த குழி திறக்கப்பட்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மீண்டும் மூடப்படவில்லை. அதற்கு மாறாக குழியில் கம்பு நட்டி, அதன் மீது வெள்ளை நிற சாக்குப்பை போட்டு வைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த குழியை மூடி போட்டு மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்