மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா தேத்தூர் கிராமம் ஸ்ரீதோப்பூர் செல்ல சாலை வசதி இல்லாமல் மண்ரோடாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் மழை பெய்தால் சாலையில் நீரானது தேங்கி சாலையானது சேறும், சகதியுமாக மாறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து சரிசெய்ய வேண்டும்.