கோவை கணபதி அடுத்துள்ள கோபாலகிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து சத்திரோடு செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி கீேழ விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகத்தினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.