சகதி காடாக மாறும் சாலை

Update: 2022-10-19 16:50 GMT

பெரியகுளம் தாலுகா வடகரை அரண்மனை தெரு பகுதியில் தார்சாலை அமைக்கப்படவில்லை. மண் பாதையாகவே உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அந்த சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




மேலும் செய்திகள்