கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2022-10-19 13:21 GMT
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், கள்ளிக்குடி ஊராட்சி, பூங்குடி கிராமத்தில் உள்ள சடையாண்டி நகரில் சில மாதங்களுக்கு முன்பு சாலை பராமரிப்பு பணி நடைபெறுவதுபோல் சாலை தோண்டப்பட்டு ரோடு ரோலர் மூலம் சமன் செய்து பல மாதங்கள் கடந்த நிலையில் அடுத்த கட்ட பணிகள் நடைபெறாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் மழை பெய்யும்போது இந்த சாலை முழுவதும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்