குளமாக மாறி சாலை

Update: 2022-10-19 12:43 GMT
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா, அழகாபுரம் சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலையில் ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளம் உள்ளதால் தற்போது பெய்த மழைநீர் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்