வெள்ளை வர்ணம் பூசப்படாத வேகத்தடை

Update: 2022-10-16 15:05 GMT

அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் அருகே உள்ள முனியங்குறிச்சி கிராமத்தில் சாக்கடை கால்வாய் அமைத்தும் சாலையின் உயரத்தை அதிகப்படுத்தி சாலை அமைந்துள்ளனர். இந்த சாலையில் ரேஷன் கடை அருகிலும், தெற்கு தெரு பகுதியில் 2 பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ளன. இந்த பள்ளி மாணவர்களுக்கு இவ்வழியே செல்லும் கனரக வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி வேகத்தடைகளில் இதுவரை வெள்ளை வர்ணம் பட்டைகளோ மேலும் வேகத்தடை உள்ளதற்கான அறிவிப்பு பலகையும் ஏதும் அமைக்கவில்லை. இதனால் இவ்வழியே புதிதாக வருபவர்கள் அடிக்கடி வேகத்தடையில் விழுந்து காயம் அடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்