கரூர் மாவட்டம், ஆவாரங்காட்டு புதூர் தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனையடுத்து அதனை சரி செய்வதற்காக சாலைகளில் ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் எந்த பணியும் நடைபெற வில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் நடந்து செல்லவே மிகவும் சிரமம்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.