அடிப்படை வசதிகள் இன்று தவிக்கும் மக்கள்

Update: 2022-10-02 13:27 GMT

திருச்சி மாவட்டம், காட்டூர் அம்மன் நகர் 7-வது குறுக்குத் தெரு விரிவாக்கம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி, வடிகால் வசதி முறையாக அமைக்கப்படாமல் உள்ளதால் மழை பெய்யும் போது, மழைநீர் செல்ல வழி இன்று தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் காலி மனைகளிலும் வீடுகளின் அருகே மழைநீர் தேங்குவதால் அவற்றிலிருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்