மதுரை அசோக்நகர் செல்லும் வழியில் பள்ளிக்கு அருகில் கேபிள் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது. இந்த வழியாக தினமும் மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இவ்வாறு தோண்டப்பட்ட பள்ளத்தால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பள்ளத்தை விரைந்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.