மதுரை மாநகராட்சி வெண்மணி மற்றும் ஜான்சிராணிபுரம் மெயின்ரோடு 29-வது வார்டு பகுதியில் சாலைகளை சிலர் ஆக்கிரமித்து காய்கறி, பழங்கள், இறைச்சி போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் வாகனஓட்டிகள் பயணிக்கவும், பாதசாரிகள் நடப்பதற்கும் போதிய வழியின்றி சிரமப்படுகின்றனர்.எனவே பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.